கண்டுபிடித்துச் சொல்லுபவர்களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசு உண்டு. ஐம்பதாயிரம் ரூபாய் வெல்ல வாய்ப்பு.
சிருஷ்டிப்பு
1 இருபத்து நான்கு மணி நேரம் கொண்ட நாட்களாகிய ஆறு நாட்களில் தேவன் யாவையும் சிருஷ்டித்தார்.
2 இந்த முதல் ஆறு நாட்களில் ஒரு நாளில்தான் தேவன் தூதர்களையும் சிருஷ்டித்தார்.
3 தேவன் பூமியை முதலாம் நாளில் சிருஷ்டித்தார்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம்
4 பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் அந்நிய பாஷையில் பேசுவீர்கள். அந்நிய பாஷையில் பேசவில்லை என்றால் ஆவியின் அபிஷேகம் இல்லை என்றுதான் அர்த்தம்.
5 ஷீக்கபாப்பாபாபா என்பதும் ஷங்கரப்பாபாபா என்பதும் காரியங்கலகிரிகிரிகிரி என்பதும் அர்த்தம் இல்லாவிட்டாலும் பரிசுத்தஆவியானவர் அருளும் அந்நிய பாஷையே.
6 காத்திருப்பு கூட்டத்திற்கு போனால் ஆவியின் அபிஷேகம் சீக்கிரம் பெற்றுக் கொள்ளலாம்.
7 அந்நிய பாஷையும் தீர்க்க தரிசனமும் ஒழிந்து போகாத ஆவியின் வரங்கள். அன்பு வேண்டுமானாலும் ஒழிந்து போகும்.
8 பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அந்நியபாஷை பேசத்தானே தவிர மற்ற வரங்களையோ, ஆவியின் கனியையோ வெளிப்படுத்த அல்ல.
தசமபாகம் காணிக்கை
9 விசுவாசிகள் கொடுக்கும் காணிக்கையை ஊழியர்கள் சபைக்கு என்று கொடுத்தால் சபைக்கும், தனக்கு என்று கொடுத்தால் தனக்கும் வைத்துக் கொள்ளலாம். தனக்கென்று கொடுக்காத பட்சத்தில் சபைக்குக் கொடுப்பதிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு கணக்கு காண்பிக்க தேவை இல்லை.
10 நம்முடைய பாவங்களுக்கு ஈடாக பணம் கொடுத்து கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பி விடலாம்.
11 விசுவாசிகள் தங்கள் ஊழியர்களுக்கு வருமானத்தில் (வரி கட்டியபின் மீதியில்?) தசமபாகம் கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு காணிக்கை கொடுக்க வேண்டும்.
வாழ்ந்து சுகமாயிருத்தல்
12 கிருபையின் காலத்தில் வாழும் விசுவாசிகளாகிய நாம் உலகப் பிரகாரமாக செழித்து சுகமாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்.
13 வருமானத்தில் எவ்வளவு மிஞ்சினாலும் அதை எப்படி வேண்டுமானாலும் செலவு செய்வது நம் உரிமை.
14 உலகப் பிரகாரமான ஆசீர்வாதம் இருந்தாலே தேவன் நம் வாழ்க்கையை அங்கீகரிக்கிறார் என்று பொருள்படும்.
15 தேவப்பிள்ளைகள் இராஜாவின் பிள்ளைகள். ஏழைகளாக இருக்கக்கூடாது.
வியாதியும் தெய்வீக சுகமும்
16 விசுவாசிகள் வியாதிப்பட்டால் அவர்களுக்குள் பாவம் இருக்கிறது.
17 விசுவாசிகள் வியாதி சுகமாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வது அவிசுவாசத்தைக் குறிக்கும்.
சமுதாயப் பொறுப்புணர்வு
18 விசுவாசிகள் அரசியலில் ஈடுபட்டு சமுதாயத்தை சீர்ப்படுத்த வேண்டும்.
19 விசுவாசிகள் சமூக சேவை செய்து மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் கட்டி வரியவருக்கு உதவி செய்யவேண்டும்.
கிறிஸ்துவின் சபையில்
20 பெண்கள் சபையில் மேய்ப்பர்கள் போதகர்களாக நியமிக்கப்பட்டு போதிக்கலாம்.
21 சபையில் மேய்ப்பர்கள் போதகர்களாக நியமிக்கப்பட BD, B.Th, M.Th பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
22 சபையில் பாஸ்டருக்கு கீழ் அவருடைய மனைவியும் மகன் மகள்களும் பாஸ்டராக ஊழியம் செய்வது அவருக்குப் பின் அந்த ஊழியம் (வருமானம், சொத்து) தக்கவைத்துக் கொள்ள சுலபமாக இருக்கும். ஊழியத்திற்கு அழைப்பு, தேவனுக்கு தன்னை அர்ப்பணித்தல் அவசியம் இல்லை.
23 ஒரு போதகர் தனக்குக் கீழ் சில போதகர்களை ஏற்படுத்திக் கொண்டால் அவர் பிஷப் ஆகிவிட தகுதி வாய்ந்தவர்.
24 சபையில் ஆராதனை நடத்தவோ, பாடல்கள் பாடவோ, (சினிமா சீரியலில்) இசைக்கருவி வாசிக்கவோ திறமை இருந்தால் போதும். இரட்சிப்பு அவசியமில்லை.
25 பெண் விசுவாசிகள் சபைக்குள் இருக்கும்போது முக்காடிட்டுக் கொள்வது இந்தக் காலத்தில் அவசியம் இல்லை.
26 சபைகூடுதலுக்கு வரும்போது வெண்ணிற ஆடை உடுத்துவது பரிசுத்தத்தைக் குறிக்கும்.
27 வேதத்திலுள்ள கற்பனைகள் ஆலோசனைகள் தவிர சபையின் கோட்பாடுகள் கட்டுப்பாடுகளுக்கும் விசுவாசிகள் அடங்கி நடக்க வேண்டும்.
28 விசுவாசிகள் தங்கள் மீறுதல்களை சபைக்கு முன் வந்து அறிக்கை செய்தால்தான் திருவிருந்தில் கலந்து கொள்ளலாம்.
ஊழியர்கள்
29 ஊழியரின் ஆவியை பகுத்தறிய விசுவாசிகளுக்கு உரிமை இல்லை.
30 ஊழியர்கள் தவறு செய்யும்போதும் பொய் சொல்லும்போதும் மாயுமாலம் செய்யும்போதும் விசுவாசிகள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட வேண்டும். கர்த்தர் அபிஷேகம் பண்ணினவர்களை குற்றம் சொல்லக் கூடாது.
கிறிஸ்தவ மதம்
31 ஒருவர் ஒழுங்காக ஜெபித்து, வேதம் வாசித்து, தவறாமல் ஆலயம் சென்று, தசமபாகம் கொடுத்தாலே பரலோகம் செல்ல தகுதி வாய்ந்தவர் ஆவார்.
32 காலை எழந்தவுடன் வேதாகமம் வாசிக்காவிட்டால் பள்ளிப் பாடம் மண்டையில் ஏறாது.
33 ஜெபிக்காமல் வெளியே சென்று விட்டால் எதுவும் உருப்படியாக நடக்காது.
34 உபவாசிக்காவிட்டால் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது.
ஞானஸ்நானம்
35 ஞானஸ்நானம் எடுத்தாலே ஒருவர் இரட்சிக்கப் பட்டவர் ஆகிவிடலாம்.
36 ஞானஸ்நானம் எடுக்காதவர் பரலோகம் போக முடியாது.
37 தலையில் தண்ணீர் தெளித்தாலும் இது ஞானஸ்நானமே. எனவே குழந்தைகளுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கலாம்.
திருவிருந்து.
38 திருவிருந்தில் விநியோகிக்கப்படும் அப்பத்தை மெல்லக் கூடாது. திராட்சை இரசத்தை சட்டையில் சிந்திவிட்டால் இயேசுவை அவமதிக்கிறதற்கு சமம்.
சாட்சியின் ஜீவியம்
39 ஆண்கள் நீளமாக தலைமுடி வளர்ப்பதும், பெண்கள் குட்டையாக தலைமுடி வெட்டிக் கொள்வதும் நவீன ஃபேஷன் தானே தவிர தவறல்ல.
40 திருமணமாகாத முழு நேர ஊழியர்கள் மட்டும்தான் சீயோனுக்குப் போக முடியும். மற்றவர்கள் புதிய எருசலேம் வரை தான் போய் சேர முடியும்.
இயேசுவின் இரண்டாம் மூன்றாம் வருகை
41 இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை இரண்டு கட்டங்களில் இருக்கும் – ஒரு முறை இரகசியமாகவும் அடுத்த முறை பகிரங்கமாகவும் இருக்கும்.
42 இரகசிய வருகைக்குப் பின் ஏழு வருடம் உபத்திரவ காலம் இருக்கும்.
43 உபத்திரவ காலத்துக்கு முன்னர் யூதர்கள் தங்கள் தேவாலயத்தை கட்டி தேவனுக்குப் பிரியமான பலிசெலுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.
44 முதல் மூன்றரை வருடம் உபத்திரவ காலம், அடுத்த மூன்றரை வருடம் மகாஉபத்திரவ காலம்,
45 அந்திகிறிஸ்து என்னும் ஒரு யூதன் திடீரென்று காட்சியில் வந்து பூமி அனைத்தையும் இந்த ஏழு வருடம் ஆட்சி செய்வான். அவனுக்கு உதவியாக ஒரு கள்ளதீர்க்கதரிசியும் எழும்புவான்.
46 முதல் மூன்றரை வருடம் ஆரம்பிக்கும்போது அந்திகிறிஸ்து யூதரோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்வான்.
47 சரியாக மூன்றரை வருடம் முடிந்த உடனே அந்திகிறிஸ்து சமாதான ஒப்பந்தத்தை மீறி தன்னையே தேவன் என்று அறிவிப்பான்.
48 எருசலேமில் உள்ள யூதர்களின் தேவாலயத்தில் போய் தேவனாக அமருவான். தேவாலயத்தில் பலிகளை நிறுத்தி விடுவான்.
49 அப்பொழுது யூதர்கள் தாங்கள் செய்த தவற்றை உணர்ந்து அந்திகிறிஸ்துவை எதிர்ப்பார்கள். மகா உபத்திரவகாலம் ஆரம்பிக்கும்.
50 இந்த ஏழு வருடங்களுக்குப்பின் இயேசுவின் பகிரங்க வருகை இருக்கும் யூதரெல்லாரும் இரசிக்கப்படுவார்கள். இயேசு இந்த பூமியில் ஆயிரம் வருடம் அரசாளுவார்.
Comentários