top of page

கிறிஸ்து வரும்போது சம்பவிப்பவைகள்...

Updated: Jul 8, 2023

இயேசு கிறிஸ்து வரும்போது சம்பவிப்பவைகள்


வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இயேசுவானவர் எப்படி தம்முடைய சீஷர்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார். அப்பொழுது, இந்த மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும்.


கிறிஸ்து தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் தரிசனமாகும்பொழுது (முதல்முறை இரட்சகராக ஏறக்குறைய 2020 வருடம் முன்பு வந்தார்) மின்னல்போல மிகவும் பிரகாசமாகவும், வேகமாகவும், மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும், மேகத்தின்மேல் வருவதை கிழக்கிலிருந்து மேற்குவரை உலகமெங்குமுள்ள மக்கள் யாவரும் காண்பார்கள்.இதை அவருடைய மகிமையின் பிரசன்னமாகுதல் என்றும் வர்ணிக்கலாம். இந்த நிகழ்வு கிறிஸ்தவர்கள் நம்பி எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஆனந்தபாக்கியம் என்றும் மீட்பு என்றும் விவரிக்கப்படுகிறது.


வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போகும். சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாகும்; சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும். சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்து அந்தகாரப்படும்; சந்திரன் இரத்தம் போலாகி ஒளியைக் கொடாதிருக்கும்; வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, நட்சத்திரங்கள் வானத்திலிருந்து பூமியிலே விழும்; (இயேசு மறைமுகமாக சொன்னபடி அத்திமரம் இஸ்ரவேல் என்றால், இவர்கள் தங்களுடைய ஏவுகணைகளை செலுத்தி வானத்திலிருந்து சரமாரியாக விழச்செய்வார்கள்). மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாகும்.


பூமி மிகவும் அதிரும். பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.. சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோகும். புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழும். பர்வதங்கள் காணப்படாமற்போகும்.


மனுஷரில் ஒரு பெருந்திரள் பூமியதிர்ச்சியினால் அழிவார்கள்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; 75 பவுண்ட் / 35 கிலோ நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழும்; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷிப்பார்கள்; பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் ஏற்கனவே இருதயம் சோர்ந்துபோயிருக்கும் பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், தாங்கள் அடைக்கலமாக மலைபோல் நம்பிக்கொண்டிருக்கும் தங்களுடைய ஆஸ்தி (பணம், செல்வம், சொத்து), வங்கி இருப்பு, பொன் வெள்ளி, கல்வி , வேலை, பதவி, அந்தஸ்த்து, இவைகள் அந்த நாளில் முற்றும் பயனற்றதாகிவிட்டதால் அங்கலாய்ப்பார்கள். மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்துவார்கள்.

இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்; பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்.


விசுவாசிகளுக்கு நற்பலன் கிடைக்கும்


நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தேவன் சொன்னபடி எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது. இதற்கேற்ப இப்பொழுது கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.. அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே மரித்தோரை உயிர்ப்பிப்பார். இப்படி மரணம் ஜீவனாலே ஜெயமாக விழுங்கப்படும் என்பதற்காகவே விசுவாசிகளும் வாஞ்சித்துக் காத்திருக்கிறார்கள். தேவன் சீக்கிரமாக இவர்களுடைய காலின்கீழ் சாத்தானை நசுக்கிபோடுவார்.


தேவகுமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களும், அவர் சொன்னபடி அவர் மாம்சத்தைப் புசித்து, அவர் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவர்களும், (அவரிடத்திலிருந்து அனுதினமும் ஜீவன் பெற்றுக்கொள்ளுகிறவர்களும்) நித்தியஜீவனை அடைவார்கள்; இவர்களை அவர் கடைசிநாளில் எழுப்புவார்.


கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். சாவுக்கேதுவான அவர்கள் சரீரங்களை உயிர்ப்பிப்பார்.


அற்பமான ஜென்மசரீரம் ஆவிக்குரிய சரீரமாக அழிவில்லாததாய், மகிமையுள்ளதாய், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்; அழுகிப்போன மாம்சம் தோல்முதலானவை உயிர்பெற்று, உறுப்புகள் செயல்படும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும். இதை தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். எழுப்பப்பட்டவர்கள் வானவருடைய சாயலை அணிந்துகொள்வார்கள். இது இவர்களுடைய அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரமாக இருக்கும். அந்தச் சுதந்தரம் இப்பொழுது பரலோகத்தில் இவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது இவர்களுக்கு இது புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். இதுவே கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்பு.


இயேசு சொல்லியிருக்கிறார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்”


கடைசி எக்காளமாகிய ஏழாம் எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, உயிரோடிருக்கிற விசுவாசிகள் மறுரூபமாக்கப்படுவார்கள். தேவனுடைய தூதர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.


பகலோ, இரவோ, காலை மாலையோ, வேலை நேரமோ ஓய்வு நேரமோ, இயேசுவின் வருகைக்காய் காத்திருக்கும் தம்முடையவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.


கிறிஸ்தவர்களின் ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, அவர்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவார்கள். அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே விசுவாசிகளாகிய பரிசுத்தவான்கள் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்பார்கள். தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி இவர்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.


இதன் பின்னர், “இங்கே ஏறிவாருங்கள்” என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டாகும் பெரிய சத்தம் கேட்டு, இவர்கள் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மரித்து உயிர்த்தவர்களோடே மேகத்தில் ஏறி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, மேகங்கள்மேல் வானத்திற்குப் போவார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்ப்பார்கள். இயேசு, “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” என்பார். இவ்விதமாய், கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் இவர்களுக்கு பரிபூரணமாய் அளிக்கப்படும். இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்பார்கள்.


இவர்களுடைய மீட்பர் உயிரோடிருக்கிறார், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார்.


மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூடவும் ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட வருவார்; அப்பொழுது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்; தேவன் அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். “நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது”.


நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் நீதியின் கிரீடத்தைத் தந்தருளுவார்; நன்மாதிரியாய் வாழ்ந்தவர்கள் மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவார்கள். சோதனையைச் சகித்தவர்கள் உத்தமரென்று விளங்கினதினால் ஜீவகிரீடத்தைப் பெறுவார்கள்.


அவிசுவாசிகளுக்கு நியாயத்தீர்ப்பு கிடைக்கும்


ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனாகிய இயேசுவைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.


இயேசு வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். இதோ, மேகங்களுடனே வருகிறார்; வானத்தின் மேகங்கள்மேல் அவர் வருவதை கண்கள் யாவும் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்.


தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா பாபிலோனாகிய மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்குவார். இது அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்கிற USA யூஎஸ்ஏவாகும். பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்தஆவிகளுடைய காவல்வீடும், அப்பாவி மக்களைப் பட்சிக்கிற வஞ்சகம் நிறைந்த, அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித மனுஷரின் இருப்பிடமான, குழப்பங்கள் நிறைந்த இந்த மகா பாபிலோன் விழும்! விழும்!


யூதர்களும் இசுலாமியர்களுமால் ஆன அந்திகிறிஸ்துக்களின் இராஜ்ஜியமாகிய மிருகம் பிடிக்கப்படும்; மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியாகிய USA யு‌எஸ்‌ஏவும் பிடிக்கப்படும்; இரு கூட்டத்தாரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்படுவார்கள்.


பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்படுவான்.


அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.


கடைசிகாலத்திலே பூமியெங்கும் பரம்பி பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், புதிய எருசலேமாகிய சபையையும் வளைந்துகொண்ட சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட கோகு மாகோகு என்னும் பெருந்திரள் மக்களை தேவனால் வானத்திலிருந்து இறங்கின அக்கினி பட்சித்துப்போடும். பூமியின் மனுஷரெல்லாரும் மரித்துப் போவார்கள்.


சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவிக்கும்; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவிப்பார்கள். அப்பொழுது மரணமும் (சங்கார தூதனும்), பாதாளமும் (நோவா காலத்து ஜலப்பிரளையத்துக்கு முன்னான உலகத்தில், தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்டதால் நித்திய சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று அந்தகாரத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தூதர்களும், எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அழைக்கப்படுகிற பாதாளத்தின் தூதனும்) அக்கினிக்கடலிலே தள்ளப்படுவார்கள்.


பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு காலத்து அவிசுவாசிகளாகிய, பாதாளத்தில் போய்சேர்ந்த மரித்தோராகிய சிறியோரும் பெரியோரும் தேவனுக்குமுன்பாக திரும்பவும் உயிர்த்து நிற்பார்கள். உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்பு கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள். இப்படி உயிர்த்த மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைவார்கள்.

அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கவும் ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருவார். கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது நியாயத்தீர்ப்பு உண்டாகும். அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கு உக்கிரகோபாக்கினை வரும்.


சிருஷ்டிகர்த்தரை புறக்கணித்து சிருஷ்டியாகிய சாத்தானோடு சேர்ந்துகொண்டதால் விழுந்துபோன தூதர்களும், சிருஷ்டிகரை பணிந்துகொண்ட பரிசுத்தவான்களால் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டு பிசாசானவன் தள்ளப்பட்ட அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்படுவார்கள்.


யூதர்களும் இசுலாமியர்களுமால் ஆன அந்திகிறிஸ்துக்களின் இராஜ்ஜியமாகிய மிருகத்தையும், அவர்கள் நாட்டையும் பணிந்து, அவர்களின் வஞ்சனையான ஆவியின் கட்டுப்பாட்டுக்கு தங்களுடைய சிந்தையையும் செயல்களையும் மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்தவனெவனோ,அவன் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.


சபிக்கப்பட்டவர்களும், பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும், நாய்களும் (பாவ வாழ்க்கை வேண்டாம் என்று இயேசுவிடம் மனந்திரும்பி விட்டுவந்த அருவருப்பான பாவ வாழ்க்கைமுறைக்குப் பின்வாங்கித் திரும்பப் போனவர்களும்), கிறிஸ்துவைக்குறித்தும் அவர் வார்த்தைகளைக்குறித்தும் வெட்கப்படுகிற அனைவரும், இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.


ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். இது இரண்டாம் மரணம்.


பழயவைகள் ஒழிந்து எல்லாம் புதிதாயின


சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்.


இவைகள் எல்லாவற்றிற்குப் பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். உலகத்தின் ராஜ்யங்கள் கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாகும்; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்.


இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அவருடைய வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.


நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும்.

புதிய எருசலேமாகிய கிறிஸ்துவின் சபையினர் இயேசுவோடு புதிய பூமியில் வாசம்பண்ணும்படியாக பரலோகதேவனிடத்திலிருந்து இறங்கி வருவார்கள். இங்கே அவர்களுடைய ஆண்டவரோடு தேவனுடைய குமாரராய் சதாகாலமும் வாசம்பண்ணுவார்கள்.


விசேஷக் குறிப்புகள்:


அதிவிரைவில் இயேசுவின் வருகை மெய்யாய் சம்பவிக்கும் என்றாலும்,

  • தேவன் தீர்க்கதரிசனக் கடிகாரத்தை நிறுத்திவிட்டார்

  • இரகசிய வருகைக்கு பின் இந்தக் கடிகாரம் மறுபடியும் ஓடும்

  • அந்திகிறிஸ்து என்னும் ஒரு தனிமனுஷன் வருவான்

  • இஸ்ரவேலோடு அந்திகிறிஸ்து சமாதான உடன்படிக்கை பண்ணினபின்பு எருசலேமிலிருந்து உலகையே ஆட்சி செய்வான்

  • ஏழு வருட அந்திகிறிஸ்துவின் ஆட்சியும் உபத்திரவக்காலமும் இருக்கும்

  • ரோமன் கத்தோலிக்க போப் அல்லது வேறு ஒரு பிரபலமானவன் கள்ளத்தீர்க்கதரிசியாக வெளிப்படுவான்

  • கள்ளத்தீர்க்கதரிசி அந்திகிறிஸ்துவை பணிந்துகொள்ளும்படியாக உலகமக்கள் அனைவரையும் வற்புறுத்துவான்

  • எழுத்தின்படி 666 முத்திரை கட்டாயப்படுத்தப்படும்

  • முத்திரையை தரித்துக்கொள்ளாதவர்களுக்கு முதல் மூன்றரை ஆண்டுகள் முடிந்தபின் மகா உபத்திரவக்காலம் ஆரம்பிக்கும்

  • 666 இல்லாமல் எதையும் விற்கவும் வாங்கவும் முடியாது

  • ஏழு வருட முடிவில் இயேசுவின் பகிரங்க வருகை இருக்கும்

  • யூதர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இரட்சிக்கப்படுவார்கள்

  • ஏழு வருடத்திற்கு பின்னர் இயேசுவின் ஆயிரம் வருட அரசாட்சி நடைபெறும்

  • விசுவாசிகள் இயேசுவோடு அதிபர்களாகவும் பிரதமர்களாகவும் முதல்வர்களாகவும் மந்திரிகளாகவும் ஆட்சி செய்வார்கள்

இவை யாவும் மக்களை வஞ்சிக்கும்படியாக சாத்தான் பரப்பிவிட்ட பொய்யே.


சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற கடைசிகால விசுவாசிகள் பலரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக தேவன் அவர்களுக்குள் அனுப்பும் கொடிய வஞ்சகம் இதுவாக இருக்கலாம்.


தீர்க்கதரிசன கடிகாரம் என்று எதுவும் வேதாகமத்தில் சொல்லப்படவே இல்லை. அதை தேவன் நிறுத்தவோ, திரும்ப ஓட விடவோ அவருக்கு அவசியம் இல்லை. காலம் என்பதே அவர் கையில் இருக்கிறது.


அந்திகிறிஸ்து என்று வேதாகமத்தில் நான்கு இடங்களில் மாத்திரமே எழுதப்பட்டு இருக்கிறது - 1 யோவான் 2:18, 22, 4:3, 2யோவான் 7. இங்கேல்லாம் ஒரு தனிமனுஷனைக்குறித்து அல்ல, பன்மையிலே சொல்லப்பட்டிருக்கிறது.


இயேசு கிறிஸ்து மனுஷன் அல்ல என்றோ, தேவன் அல்ல என்றோ அவரை மறுதலித்து அறிக்கை செய்து அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களே அந்திகிறிஸ்துக்கள்; இவர்கள் யோவான் காலத்திலேயே இருந்தவர்கள்தான்.


வெளிப்படுத்தின விசேஷம் 13ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட 2 மிருகங்கள் (beasts) தானியேலின்படி 2 ராஜ்ஜியங்களே, தனி மனிதர்கள் அல்ல. எனவே முதல் மிருகம் ஒரு ஜனம். அடுத்த மிருகம் இன்னொரு ஜனம்.ஒன்று கொடூரமும் முரட்டுகுணமுமுள்ளது. இரண்டாவது, அப்பாவிபோல வேஷம்போடுவது.


666 என்பது ஒரு எண் அல்ல. மனுஷரின் சிந்தையையும் செய்கையையும் கட்டுப்படுத்தும் ஒரு ஆவியே. (வெளி 7:3, 2 கொரி 1:22, எபே 1:13, 4:30). இந்த அசுத்த ஆவியை ஏற்கனவே உலகிலுள்ள 99% மக்கள் தரித்திருக்கிறார்கள்


கிறிஸ்து திரும்ப வருவேன் என்றுதான் சொல்லிப்போனாரே அல்லாமல் திரும்பத் திரும்ப வருவேன் என்று சொல்லிப்போகவில்லை. மீண்டும் ஒருமுறைதான் வருவார். இதுவே இரண்டாம் வருகை.


கிறிஸ்து பரலோகத்திலிருந்து வரும்போது மேகத்தில் மத்திய ஆகாயத்திற்கு வந்தாலும் அது அவருடைய வருகைதானேயல்லாமல், பூமிக்கு பகிரங்கமாக வருவதுதான் அவருடைய வருகை அல்ல.


கிறிஸ்து இரண்டாம்முறை வரும்பொழுது ஏறிப்போனது போலவே திரும்பிவருவதால், மனுஷர் காணும்படியாகத்தான் வருவார்; இரகசியமாக அல்ல. இது பகிரங்கமாக வருவதுதான்.


ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும் தேவ எக்காளத்தோடும் கிறிஸ்து வருவதனால் இது உலகிலுள்ள யாவரும் பகிரங்கமாகக் கண்டு கேட்கப்போகும் ஒரு பொது நிகழ்வாக இருக்கும்.


கிறிஸ்து மத்திய ஆகாயத்திலே வரும்போதே விசுவாசிகள் அவருக்கு எதிர்கொண்டுபோவார்கள். சந்திப்பு அங்கு நடந்தாலும், அப்பொழுதே அவரோடு பரிசுத்தவான்கள் அனைவரும் பூமிக்குத் திரும்ப வருவார்கள்.


பூமியில், பலன்கள் அருளும் நிகழ்வும், ஞாயத்தீர்ப்பு அளிக்கும் நிகழ்வும் அடுத்தடுத்து நடக்கும். விழுந்துபோன தூதர்களும் விசுவாசிகளால் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவார்கள்.


ஆட்டுக்குட்டியானவரின் வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட மணவாட்டியான பரிசுத்தவான்கள் அவரோடு பரலோகம் சென்றடைந்து முறைப்படி அவருடைய மனைவியாவார்கள். (மனைவிகள் அல்ல). பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள், புத்தியுள்ள கன்னிகைகள் போல கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களே. யோவான்ஸ்நானன் சினேகிதனே.


ஆண்களும், பெண்களும், உடற்கூரின்படி (மனத்தின்படி அல்ல) மூன்றாம்பாலினத்தவரும் அடங்கிய மீட்கப்பட்டோரே பரிசுத்தவான்கள். இவர்களே கிறிஸ்துவின் மனைவியாகப்போகும் மணப்பெண்.


கிறிஸ்துவின் தூய்மையான தெய்வீக அன்பும் சகல உரிமைகளும் பெற்றனுபவிக்கப்போகிற இந்த விசுவாசக் கூட்டத்தார் அவரோடு உன்னத உறவுக்குள்ளாக வந்தவர்களேயல்லாமல் பாலுறவுக்குள் அல்லவே அல்ல.


கர்ப்பவதியின் சிசுவும், நன்மைதீமை வரையறுக்கத் தெரியாத சிறுபிள்ளைகளும், பிறப்பிலேயே இப்படி சிந்திக்கும் திறன் இழந்தவர்களும், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட மாட்டார்கள்.


பரிசுத்த ஆவியினாலே உணர்த்தப்பட்டு இரட்சிக்கப்பட்டும், சந்தர்ப்ப சூழ்நிலையினால் ஞானஸ்நானம் எடுக்க முடியாதவர்கள் (துணிந்து மறுப்பவர்கள் அல்ல) வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.


‘திருடன் வருவதுபோல்’ என்பது மனுஷர் எதிர்பாராத நாளும் நேரமும்தானேயொழிய வேறல்ல. விசுவாசிகள் காத்து எதிர்பார்த்து இருக்கிறதுபோல மற்றவர்கள் இருக்க மாட்டார்கள்.


சூரியன் அந்தகாரப்பட்டு, சந்திரன் இரத்தமாக மாறி, வானங்கள் சுருட்டப்பட்ட சுரருள்போல் ஆவதால், காலம் என்பது முடிந்துபோகும். கடைசி நாள் 24 மணிநேரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. (தேவன் இந்த பூமியை மறுசீரமைப்பு செய்தபொழுது சூரியனும் சந்திரனும் நான்காம் நாள்தான் உண்டாக்கப்பட்டன. எனவே, முதல் மூன்று நாட்களாவது இப்படி இருந்திருக்க வேண்டும்).


கடைசி எக்காளம், மற்ற எக்காளங்கள் போலவேதான்; காது கேட்கும்படியாக ஒலிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது தேவனால் தெரிந்துகொள்ளபட்ட ஒரு மனுஷனாகக்கூட இருக்கலாம்.


ஆயிரம் வருட (நீண்டகால) அரசாட்சி இப்பொழுது நடக்கிறது. இயேசு இப்பொழுதும் அரசாளுகிறார். (a thousand என்பது சங்கீதம் 50ன்படியும் 91ன்படியும் ஒரு எண் அல்ல; அதுபோலவே a thousand years என்பது நீண்ட காலம்; 999க்குப் பின் வரும் ஒரு எண் அல்ல. இல்லையேல், thousand என்றே எழுதப்பட்டிருக்கும்).


வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய சீஷர்கள் அவருடைய ஆட்சியையும் அதிகாரத்தையும் இந்த பூமியில் அமலாக்கவேண்டியது அவசியம். சாத்தானோ, ஆளுகை தனக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் ஆயிரம் வருட அரசாட்சிக்கு விசுவாசிகள் காத்திருக்க வேண்டும் என்றும் அவர்களை நம்பவைத்துள்ளான்.


சீஷர்கள் பிசாசுகளை துரத்தினதாகச்சொல்லி ஆச்சரியப்பட்ட பொழுது இயேசு, சாத்தான் தாழ விழுந்ததை தான் கண்டதாக கூறினார் அல்லவா? சாத்தான் தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, இயேசுவாகிய அந்த ஆண்பிள்ளையைப்பெற்ற யூத விசுவாசிகளைத் துன்பப்படுத்தினான்.


யூத விசுவாசிகள் சாத்தானின் பிடியிலிருந்து விலகி பிழைக்கும்படி ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் (கிமு 552லிருந்து கிபி 1948 வரை 2500 வருடங்கள்) போஷிக்கப்படத்தக்கதாய் துன்பம்நிறைந்த தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி தேவனாலே சிறகுகள் கொடுக்கப்பட்டது.


சாத்தான் அந்த யூத விசுவாசிகளை அள்ளிக்கொண்டுபோகும்படி, தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்ட ‘தேவன் கடவுள் அல்ல; நானே கடவுள்’ என்னும் கொடிய வஞ்சகத்தை வாந்திபண்ணினான். அவன் பரப்பின பெரும் வஞ்சகத்தை பூமியில் வாசம்பண்ணும் மக்களனைவரும் நம்பி விழுங்கினார்கள். ‘நானே கடவுள்’ தான் ‘அஹம் பிரம்மாஸ்மி’.


சாத்தான் யூத விசுவாசிகள்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய புதிய ஏற்பாட்டு சபையோடு யுத்தம்பண்ணப்போனான்.


மரித்து உயிர்த்தெழுந்தபின் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவரான இயேசு, பாதாளத்திற்குரிய திறவுகோலை ஒரு தூதனிடம் கொடுத்தனுப்பி அவன் சாத்தானை பிடித்து, ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோடச் செய்தார்.


சாத்தான் அடைக்கப்பட்டதிலிருந்து புறஜாதிகள் அவனுடைய வஞ்சகத்திலிருந்து விடிவடைந்து இரட்சிக்கப்படவும், கிறிஸ்துவின் சபையில் சேர்த்துக்கொள்ளப்படவும் புறஜாதிகளின் காலம் துவங்கியது.


சாத்தான் அடைக்கப்படும்வரை தானியேலுக்கு சொல்லப்பட்ட யூதர்களின் காலம் 490 (ஏழு எழுபது) வருடங்கள். கடைசி வாரத்தின் நடுவில் மேசியா சங்கரிக்கப்பட்டார். அவருடைய இரத்தத்தினாலாகிய புதிய ஏற்பாடு / உடன்படிக்கை அவரால் உண்டாகி அமலாக்கப்பட்டது.


தம்முடைய ஒரே மரணத்தின் மூலமாக பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணின சமாதானப்பிரபுவின் ஜனங்கள், பழைய எருசலேம் நகரத்தையும் அங்கு இருந்த தேவாலயத்தின் பரிசுத்த ஸ்தலத்தையும் இவைகளின் அவசியமின்மையால் அழித்துப்போட்டார்கள்.


புரஜாதிகளின் காலத்தின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும். திறந்த வாசலையுடைய பிலதெல்பியா சபையின் காலத்தில் பல்லாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டு சபையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.


இயேசுவால் சபிக்கப்பட்ட அத்திமரமாகிய இஸ்ரவேல் அவருடைய சாபத்தையும் மீறி ஒரு நாடாக (இளங்கிளை )1948ல் தோன்றி 1967ல் எருசலேமைத் தலைநகராக்கத் துளிர்விட துணியும் காலமே முடிவுகாலம்.


இந்த இஸ்ரவேலாகிய இளங்கிளை தோன்றி (1948) துளிர்விடுவதைப் (1967) பார்க்கும் சந்ததி இந்த பூமியின் முடிவைக் காணும் என்று இயேசு முன்னுரைத்திருக்கிறார். ஒரு சந்ததி 60லிருந்து 80 வருடங்கள் இருக்கலாம்.


முடிவுகாலமாகிய சோதனைக்காலம் ஆரம்பிக்கும்பொழுது சாத்தான் தன்னுடைய அதளபாதாள சிறைக்காவலிலிருந்து கொஞ்சம்காலம் விடுவிக்கப்படுவான். அப்பொழுது மறுபடியும் வஞ்சிக்க ஆரம்பிப்பான். இது 1948லிருந்து 80 (பெலத்தின் மிகுதியால்) வருடங்களாகவோ, 1967லிருந்து 60 வருடங்களாகவோ இருக்கலாம். 1948+80=2028 அல்லது 1967+60= கிபி 2027.


முடிவுகால / கடைசிகால சபையாகிய லவோதிக்கேயா சபையின் காலத்தில் சாத்தான் பூமியின் நான்கு முனைகளிலிருந்தும் தேவனுக்கு விரோதமாக மக்களை மோசம்போக்கிக் கூட்டுவான்.


முடிவுகால சபையினர் மிகவும் ஆவிக்குரியவர்களைப்போல் வேஷம் போடுவார்கள். ஆனால் இயேசுவை புறக்கணித்துவிடுவார்கள். சுருக்கென்று உலகத்தாரை உணர்த்தும்படியான வாழ்க்கை வாழமாட்டார்கள். கர்த்தரே வாந்திபண்ணிப்போடும் அளவுக்கு மோசம்!


கடைசிகால கிறிஸ்தவர்கள் விசுவாசதுரோகம் செய்வார்கள். கிறிஸ்து இயேசுவுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள். உண்மை விசுவாசிகளை துன்புறுத்தி, காட்டிக்கொடுத்து, மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்.


கடைசிகாலத்தில் இயேசுவுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் வெகு சிலரே. மற்ற அனைத்து ‘விசுவாசி’களும் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிறபடியால் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக தேவனே கொடிய வஞ்சகத்தைத் அவர்களுக்கு அனுப்புவார்.


தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பலனை மறுதலித்து பெயரளவில் கிறிஸ்தவர்களாக வாழும் இருமுறை செத்தவர்களின் பிணம் எங்கேயோ அங்கே மோசம்போக்கி வஞ்சகமாய் பட்சிக்கிறவர்கள் (கழுகுகள்) கூடுவார்கள். இதில் ‘கிறிஸ்தவ’ கள்ளப்போதகர்களும் உண்டு. அவர் அளிக்கும் பெரிய விருந்துக்கு இக்கழுகுகள் அழைக்கப்படுவார்கள்.


கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக சாத்தான் செய்யும் முயற்சிகளைக் கட்டுப்படுத்தும்படியாக இந்த சோதனைக்காலம் குறைக்கப்படும். கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார். 2027/28க்கு முன்னதாகவே?


பாழாக்கும் அருவருப்பாகிய அல் அக்ஸா ஸ்தாபிக்கப்பட்ட கிபி 688 முதல், ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள் (வருஷம்) மட்டும் 688+1335 காத்திருந்து கிபி 2023ஐ சேருகிறவன் பாக்கியவான்.


மோசம்போனவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களையும் புதிய எருசலேமையும் வளைந்துகொள்வார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போடும்.


(உலகின் முதல் மொழியான தமிழின் வருடச் சக்கரம் 60 வருடங்கள். எனவேதான் தமிழர்களின் சஷ்டியபூர்த்தி அல்லது 60ஆம் பிறந்தநாள் 60ஆம் கல்யாணம் என விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழிலிருந்து தோன்றியதே சமஸ்க்ரிதம். இதோ: வருடம், தமிழ்ப்பெயர், சமஸ்க்ரித மொழியாக்கம்: 2022-23, நற்செய்கை, சுபக்ருது; 2023-24, மங்கலம், சோபக்ருது; 2024-25, பகைக்கேடு (தேவ கோபாக்கினை?), க்ரோதி; 2025-26, உலகநிறைவு, விசுவாசுவ. ஐயையோ!).


மேலும் அறிந்துகொள்ள https://www.jesusreigns.in/revelation

47 views0 comments

Comentarios


bottom of page