top of page

விசேஷக் குறிப்புகள் (1)

அதிவிரைவில் இயேசுவின் வருகை மெய்யாய் சம்பவிக்கும்

அதிவிரைவில் இயேசுவின் வருகை மெய்யாய் சம்பவிக்கும் என்றாலும்,
• தேவன் தீர்க்கதரிசனக் கடிகாரத்தை நிறுத்திவிட்டார்
• இரகசிய வருகைக்கு பின் இந்தக் கடிகாரம் மறுபடியும் ஓடும்
• அந்திகிறிஸ்து என்னும் ஒரு தனிமனுஷன் வருவான்
• இஸ்ரவேலோடு அந்திகிறிஸ்து சமாதான உடன்படிக்கை பண்ணினபின்பு எருசலேமிலிருந்து உலகையே ஆட்சி செய்வான்
• ஏழு வருட அந்திகிறிஸ்துவின் ஆட்சியும் உபத்திரவக்காலமும் இருக்கும்
• ரோமன் கத்தோலிக்க போப் அல்லது வேறு ஒரு பிரபலமானவன் கள்ளத்தீர்க்கதரிசியாக வெளிப்படுவான்
• கள்ளத்தீர்க்கதரிசி அந்திகிறிஸ்துவை பணிந்துகொள்ளும்படியாக உலகமக்கள் அனைவரையும் வற்புறுத்துவான்
• எழுத்தின்படி 666 முத்திரை கட்டாயப்படுத்தப்படும்
• முத்திரையை தரித்துக்கொள்ளாதவர்களுக்கு முதல் மூன்றரை ஆண்டுகள் முடிந்தபின் மகா உபத்திரவக்காலம் ஆரம்பிக்கும்
• 666 இல்லாமல் எதையும் விற்கவும் வாங்கவும் முடியாது
• ஏழு வருட முடிவில் இயேசுவின் பகிரங்க வருகை இருக்கும்
• யூதர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இரட்சிக்கப்படுவார்கள்
• ஏழு வருடத்திற்கு பின்னர் இயேசுவின் ஆயிரம் வருட அரசாட்சி நடைபெறும்
• விசுவாசிகள் இயேசுவோடு அதிபர்களாகவும் பிரதமர்களாகவும் முதல்வர்களாகவும் மந்திரிகளாகவும் ஆட்சி செய்வார்கள்

இவை யாவும் மக்களை வஞ்சிக்கும்படியாக சாத்தான் பரப்பிவிட்ட பொய்யே.

சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற கடைசிகால விசுவாசிகள் பலரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக தேவன் அவர்களுக்குள் அனுப்பும் கொடிய வஞ்சகம் இதுவாக இருக்கலாம்.

தீர்க்கதரிசன கடிகாரம் என்று எதுவும் வேதாகமத்தில் சொல்லப்படவே இல்லை. அதை தேவன் நிறுத்தவோ, திரும்ப ஓட விடவோ அவருக்கு அவசியம் இல்லை. காலம் என்பதே அவர் கையில் இருக்கிறது.

அந்திகிறிஸ்து என்று வேதாகமத்தில் நான்கு இடங்களில் மாத்திரமே எழுதப்பட்டு இருக்கிறது - 1 யோவான் 2:18, 22, 4:3, 1 யோவான் 7. இங்கேல்லாம் ஒரு தனிமனுஷனைக்குறித்து அல்ல, பன்மையிலே சொல்லப்பட்டிருக்கிறது.

இயேசு கிறிஸ்து மனுஷன் அல்ல என்றோ, தேவன் அல்ல என்றோ அவரை மறுதலித்து அறிக்கை செய்து அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களே அந்திகிறிஸ்துக்கள்; இவர்கள் யோவான் காலத்திலேயே இருந்தவர்கள்தான்.

வெளிப்படுத்தின விசேஷம் 13ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட 2 மிருகங்கள் (beasts) தானியேலின்படி 2 ராஜ்ஜியங்களே, தனி மனிதர்கள் அல்ல. எனவே முதல் மிருகம் கொடூரமும் முரட்டுகுணமுமுள்ள ஒரு ஜனம். அடுத்த மிருகம் அப்பாவிபோல வேஷம்போடும் ஒரு ஜனம்.

666 என்பது ஒரு எண் அல்ல. மனுஷரின் சிந்தையையும் செய்கையையும் கட்டுப்படுத்தும் ஒரு ஆவியே. (வெளி 7:3, 2 கொரி 1:22, எபே 1:13, 4:30). இந்த அசுத்த ஆவியை ஏற்கனவே உலகிலுள்ள 99% மக்கள் தரித்திருக்கிறார்கள்.

கிறிஸ்து திரும்ப வருவேன் என்றுதான் சொல்லிப்போனாரே அல்லாமல் திரும்பத் திரும்ப வருவேன் என்று சொல்லிப்போகவில்லை. மீண்டும் ஒருமுறைதான் வருவார். இதுவே இரண்டாம் வருகை.

கிறிஸ்து பரலோகத்திலிருந்து வரும்போது மேகத்தில் மத்திய ஆகாயத்திற்கு வந்தாலும் அது அவருடைய வருகைதானேயல்லாமல், பூமிக்கு பகிரங்கமாக வருவதுதான் அவருடைய வருகை அல்ல.

கிறிஸ்து இரண்டாம்முறை வரும்பொழுது ஏறிப்போனது போலவே திரும்பிவருவதால், மனுஷர் காணும்படியாகத்தான் வருவார்; இரகசியமாக அல்ல. இது பகிரங்கமாக வருவதுதான்.
ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும் தேவ எக்காளத்தோடும் கிறிஸ்து வருவதனால் இது உலகிலுள்ள யாவரும் பகிரங்கமாகக் கண்டு கேட்கப்போகும் ஒரு பொது நிகழ்வாக இருக்கும்.

bottom of page