top of page

பிற்சேர்க்கை

கிறிஸ்து திரும்ப (திரும்ப) வருகிறாரா?

இயேசு நமக்கு விட்டுச் சென்ற வாக்கு:

“இதோ, சீக்கிரமாய் வருகிறேன்”. “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்”. “மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்”. திரும்பத் திரும்ப மூன்று முறை இயேசுவே வேதாகமத்தின் கடைசி அதிகாரத்தில் சொன்ன வார்த்தைகள் இவை. “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்”. இது அவருடைய வாக்கு. அழிந்து போய்க்கொண்டிருக்கும் உலகத்தை முடிவில்லா மரணத்தினின்று இரட்சிக்கும்படியாக முதன்முறை வந்தபொழுது தம்முடைய சீஷர்களிடத்தில் அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளே இவைகள்.

ஒன்று, இயேசு (அ) இவ்வார்த்தைகளாலே தன்னுடைய சீஷர்களையும் கேட்கிறவர்களையும் வஞ்சித்த ஒரு சாதாரண மனிதன், அல்லது (ஆ) காணக்கூடாத கடவுளை நமக்குக் காண்பிக்கும்படியாக வந்த தெய்வத்தின் தற்சுரூபமாகிய தேவகுமாரன். (அ) உண்மையானால், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்களின் மனதை வளைத்துக்கொள்ளும் நோக்கில் வஞ்சனையை பரப்பிய பலரில் ஒருவர் என்று இவரையும் இவர் வார்த்தைகளையும் நாம் நிராகரித்துவிடலாம். ஆனால், இவர் பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார். அப்படியானால் இவருடைய வாக்கு சத்தியம்; அதிமுக்கியத்துவம் வாய்ந்தது; மனிதர் மனதிலே பயத்தையும், பக்தியையும் நடுக்கத்தையும் வருவிக்கவேண்டும்.

இயேசுவை பின்பற்றுகிறவர்கள்மட்டும்தான் இப்படி ஒருவருடைய வருகையை எதிர்பார்த்திருக்கிறார்களா?

உலகின் அனைத்து மதத்தினருமே, நடுங்கி திகைத்துக்கொண்டிருக்கும் மனுக்குலத்தை இங்குள்ள வேதனை, துக்கம் மற்றும் உபத்திரவத்தினின்று விடுவிக்கும்படியான ஒரு நாயகன் வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் கிறிஸ்து வருவார் என்றும், யூதர்கள் மேசியா வருவார் என்றும், இந்துக்கள் கல்கி அவதாரம் வருவார் என்றும், இசுலாமியர் மஹ்தி வருவார் என்றும் அவரோடிணைந்து யுத்தம் செய்ய ஈஸாநபி வருவார் என்றும் காத்திருக்கிறார்கள். இது உலகின் 70% மக்கள்தொகையாகும். மீதமுள்ள பொதுவுடமைவாதிகளும் நாத்தீகர்களும் மதம்மறுப்பவர்களும் இவ்வுலகம் தன் பரிதாப நிலையிலிருந்து எப்படி மீளும் என்பதைப்பற்றிய நம்பிக்கை அற்றவர்களே. எனினும், நம்முடைய இந்த நிர்பந்தநிலைக்கும் சூழல் கெட்டழிந்து போனதற்கும் ஒருவிதத்தில் நாம் யாவரும் காரணமானவர்களே.

வெகுவேகமாக நிலைகுலைந்துபோய்க்கொண்டிருக்கும் இந்த சூழல் குறித்து மெய்யாகவே கரிசனையுடையவர்கள் பலர் இங்கு இருந்துகொண்டுதான் இருக்கிறோம். நாம் வாழும் சமுதாயத்தையும் சுற்றுச்சூழலையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கும் பலர் நாம் திரும்பிவர முடியாத ஒரு எல்லையைத் தாண்டி போய்விட்டதாகவே கருதுகிறார்கள். அரசியல், மதம், பொருளாதாரம், வர்த்தகம், இராணுவம், தொழிநுட்பம் மற்றும் கல்வி இவைகளின் தரம் வெகுவீழ்ச்சி அடைந்துள்ளது. உலகமே இதின் எல்லாத் துன்பங்களினின்றும் நம்மை விடுவித்து பெருமாற்றம் கொண்டுவரும் ஒரு இரட்சகர் வரமாட்டாரா என்று ஏங்கித் தவிக்கிறோம்.

கடவுளுடைய வார்த்தையாகிய வேதாகமத்தின் வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள சத்தியம் தவிற பேய்களின் அருள்வாக்கு சொல்லும் நாஸ்ட்ரடாமஸ் பாபா வெங்க போன்றோரும் சீக்கிரத்தில் வரவிருக்கும் உலக அழிவின் நாள் வெகுசமீபமாயுள்ளது என்று முன்னறிவிக்கின்றனர். இதன் விளைவாக உலக அழிவின் இறுதிகட்டத்தில் ஆளுகையில் உள்ள ஆட்சியாளர்களை அழித்து சமத்துவம் நிலவும் சமுதாயம் அமைக்கும் ஒரு வீரன் தோன்றும் திரைப்படங்களும் வலைதளத்தொடர்களும் மலிந்து கிடக்கின்றன.

இன்றைய விசுவாசிகள் ஏற்கனவே வஞ்சிக்கப்பட்டவர்களா?

ஆயிரக்கணக்கான கடைசிகால தீர்க்கதரிசிகளும் பிரசங்கிமார்களும் இன்று பிரபலமான ஒரு உபதேசத்தை பரப்பிவருகிறார்கள்: உலகெங்கும் உள்ள அரசுகளையும் பொருளாதாரத்தையும் மதங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து ஏழு வருடங்கள் இஸ்ரவேலிலிருந்து ஆளுகை செய்ய அந்திகிறிஸ்து என்ற ஒருவன் வருவான். பொதுமக்களின் வலுவான ஆதரவைப்பெற்ற அவனை உலகமே பணிந்துகொள்ளும்படியாக கள்ளத்தீர்க்கதரிசி என்னும் ஒருவன் வற்புறுத்துவான் என்றும் இது அனேகமாக ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தின் (இவர்களை கிறிஸ்தவர்கள் என்று உலகம் தவறாக நம்பிக்கொண்டிருக்கிறது) போப் ஆண்டவராக இருக்கலாம் என்றும் சொல்லுகிறார்கள். இயேசு ஒருமுறை இரகசியமாகவும் ஏழு வருடங்களுக்குப் பிறகு மற்றுமொருமுறை பகிரங்கமாகவும் வருவார் என்றும் பின்பு ஆயிரம் வருஷம் பூமியில் அரசாட்சி செய்வார் என்றும் மக்களை குழப்புகிறார்கள். சிலுவைக்குப் போவதற்கு சற்றுமுன் இயேசு தன்னுடைய சீஷர்களை எதிர்காலத்தில் வர இருக்கும் வஞ்சகத்தைக் குறித்து எச்சரித்தது ஆச்சரியமல்ல.

இயேசு எதற்காக வருகிறார்?

இதோ இயேசுவின் வார்த்தைகள்: “மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்; அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்”. “அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது”.

இயேசுவின் 12ஆவதும் கடைசி அப்போஸ்தலனுமாகிய பவுலின் படி “தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்”.

இயேசுவின் வருகைக்கான பொதுவான அறிகுறிகள்:

தேவனுடைய இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் உலகமெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும்

விசுவாசிகளாகிய பரிசுத்தவான்களுக்கு உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.

கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் பரப்பும் கொடிய வஞ்சகத்தினாலே பெயரளவில் கிறிஸ்தவர்களாயிருக்கிறவர்கள் விழுந்து போவார்கள்.

தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்தி மனுஷனுக்குள் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிற சுயம் வெளிப்படும்

வரப்போகும் பேரழிவைக் குறித்து கவலையற்றவர்களாக, மனுஷர் தங்கள் உடலின் இச்சைகளை நிறைவேற்றவும் தடையின்றி வியாபாரம் செய்யவும் தொடர்வார்கள்.

தேவனுடைய மக்களுக்கு விரோதமாக பூமியின் நான்கு முனைகளிலுமிருந்து பெருந்திரள் கூட்டத்தை கூட்டும்படியாக சாத்தான் மீண்டும் கொடிதான வஞ்சகம் செய்ய முயற்ச்சிப்பான்.

இயேசுவின் வருகைக்கான குறிப்பிட்ட அறிகுறி:

அத்திமரத்தின் உவமை: இயேசு சபித்த அத்திமரம் மாயக்காரரான இஸ்ரவேலரே. இதை மற்ற இடங்களிலும் இயேசு சுட்டிக்காட்டி இருக்கிறார். இயேசுவின் இந்த சாபத்தை எதிர்த்து இஸ்ரவேல் ஒரு தேசமாக உருவாகவும் எருசலேமை அதன் தலைநகர் ஆக்கவும் அரசியல் ரீதியான ஒரு வீண் முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவங்களெல்லாம் நிறைவரித் தீரும் வரை இதைக்கண்ட தலைமுறை அகன்று போகாது. ஒரு தலைமுறை என்பது அறுபதிலிருந்து எண்பது வருடங்கள்.

யார் இந்த அந்திக்கிறிஸ்துவும் கள்ளத் தீர்க்கதரிசியும்?

வேதாகமம் அந்திக்கிறிஸ்துக்கள் என்று பன்மையில் சொல்கிறது. நிச்சயமாக ஒரு தனி மனுஷன் அல்லவே அல்ல. கள்ளத்தீர்க்கதரிசிகளும் அப்படியே. இவர்கள் இருவரையும் வேதாகமம் மிருகம் என்று சொல்லுகிறது. தானியேல் தீர்க்கதரிசனத்தில் ஒவ்வொரு மிருகமும் ஒரு இராஜ்ஜியம் என்று எழுதியிருக்கிறது. அப்போஸ்தலனாகிய யோவானின்படி அந்திக்கிறிஸ்துகள் கிபி முதல் நூற்றாண்டிலேயே இருந்தவர்கள்தான்.

அந்திக்கிறிஸ்துக்கள் இயேசுவின் மனிதத்துவத்தையோ தெய்வத்துவத்தையோ அல்லது இரண்டையுமே ஏற்றுக்கொள்ளாதவர்கள். இவர்கள் இன்றைய யூதர்கள் மற்றும் மறைமுகமாக யூதர்களாக வாழ்பவர்கள் (மத்தியக்கிழக்கு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்து பாரதத்தில் குடியேறிய யூத ஆரியர்களும் இதில் அடங்கும்) மற்றும் இசுலாமியர்களே. ‘அந்தி’ என்பது ‘கடைசி’ என்ற அர்த்தம் உடையது அல்ல; லத்தீனில் ‘anti’ என்பதன் தமிழ்வடிவமே. எனவே அந்திகிறிஸ்துக்கள் கிறிஸ்துவுக்கு எதிரிகள். மறைமுக யுக்திகளினாலும் தொழில்நுட்பத் திறமையினாலும் உலகத்தின் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் இராணுவத்தையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து உலகமனைத்தையுமே தங்களுக்கு அடிபணியவைத்துள்ளார்கள்.. 40%திற்கும் அதிகமான நோபல் பரிசு வெற்றியாளர்கள் இவர்களே. உலக வங்கி போன்ற அனைத்து வங்கிகளின் பணத்தையும் தங்கள் கைவசம் வைத்துள்ளவர்கள் இவர்களே. உலகத்திலுள்ள மிகப்பெரும் தொழில்நிறுவனங்களின் தலைமைகளும் பணமுதலைகளும் யூதரோ, யூதப் புலம் கொண்டவர்களோ அரபியர்களோதான்.

கள்ளத் தீர்க்கதரிசிகள் இந்த அந்திகிறிஸ்துக்களின்கைகளில் சிக்கிய கைப்பாவைகளாக செயல்படுகிறார்கள். ஒன்றுமரியாதவர்கள் போல இருந்தாலும், உலகத்தையே அந்தி கிறிஸ்துக்களுக்கு அடிபணிய வைப்பதே இவர்கள் வேலை. முழு உலகத்தையும் கைப்பற்றி யாவரையும் தங்களுக்கு கீழ்ப்படுத்தும் அந்திகிறிஸ்துக்களின் தீமையான மறைமுக திட்டத்தையும் தந்திரமான யுக்திகளையும் இவர்கள் முன்னின்று செயல்படுத்துகிறார்கள். இவைகள் யாவற்றுக்கும் சரியான பொருத்தம் இன்றைய USA தான். இஸ்ரவேல் என்னும் நாடு உருவான 14 மே 1948 அன்றே அதை இரவோடு இரவாக அங்கீகரித்த முதல் வல்லரசு இந்த ஐக்கிய அமெரிக்க நாடுகளே. 1967இல் தர்க்கத்துக்குரிய பகுதியாகக் கருதப்படும் எருசலேமை இஸ்ரவேல் அக்கிரமித்த பின்னர் இதை ஆதரித்து இங்கு தங்களுடைய தூதரகத்தை முதலாவதாகத் திறந்தவர்கள் இந்த யு‌எஸ்‌ஏ தான்.

666 அந்திகிறிஸ்து காலத்தில் மக்களுடைய நெற்றிக்களிலும் வலதுகைகளிலும் பதிக்கப்படும் எழுத்தின்படியான ஒரு முத்திரை அல்ல. மக்கள்மனதை ஆட்கொண்டு அவர்களுக்கு கீழ்ப்படியும் செயல்களை செய்யத் தூண்டும் அந்திகிறிஸ்துவின் ஆவியே அது. தாவீதின் நட்சத்திரம், இசுலாமியர்களின் கடவுளை உச்சரிக்கும் வார்த்தை, கிழக்கிலுள்ள நாடுகளின் யிங் யாங் , இந்திய மற்றும் தென்கிழக்கு நாடுகளின் மக்களால் வணங்கப்படும் யந்திரம் – ஏறக்குறைய உலகனைத்துமே இவைகளை ஏற்கனவே முத்திரையாக வாங்கிவிட்டார்கள்.

இயேசு சொன்னபடி அவர் வருகையின்போது நடப்பது என்ன?

சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.

அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார். தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். 2027க்கு முன்னரே இது நடக்குமோ? 2023? நீங்கள் ஆயத்தமா?

bottom of page