top of page

நல்ல காலம் பொறக்குதா?

முன்னுரை

என்ன நடக்க போகிறது என்று அறிந்துகொள்வதில் நம் யாவருக்குமே ஆவல்தான். நம்மில் ஒருபுறத்தார் இப்பொழுது நாம் இருக்கும் நிலையினின்று நம் சூழ்நிலை மேம்படாதா? என்ற ஆதங்கத்தோடு வாழ்கிறோம். மறுபுறத்தில் நிற்போர் இப்பொழுதுள்ள வசதியான நம் நிலை எப்பொழுது மாறிவிடுமோ? என்ற பயத்தில் இருக்கிறோம். ஒரு சிறிய கூட்டம் எதையும்பற்றி கவலையற்றவர்கள் போல நடித்துக்கொண்டிருக்கிறோம்; ஆனாலும் உள்ளத்திலே ஒரு உறுத்தல் இருந்துகொண்டேதான் இருக்கிறது. என்ன நடக்குமோ?

ஆருடம், ஜோசியம், பஞ்சாங்கம், ஜாதகம், இராசிபலன், மருத்துவரின் பரிந்துரை இவை ஒருபுறம் தனிநபருக்கு எதிர்காலத்தை சொல்லும் என்று நாம் நம்பிக்கொண்டிருக்க, அறிவியலும் தொழில்நுட்பமும் மறுபுறத்தில் நம் பூமிக்கு இனி என்ன நடக்கும் என்று அறிவிக்க முயலுகின்றன. இவைகளையும் தாண்டி நாஸ்ற்றடாமஸ், பாபா வெங்கா போன்றோர் தங்கள் வாழ்நாள் காலத்தில் சொல்லிப்போயிருக்கிற தீர்க்கதரிசனங்கள் சில சரியாக நிறைவேறியுள்ளதால் அவர்கள் முன்னறிவித்த சம்பவங்கள் நடந்துவிடுமோ என்ற எதிர்ப்பார்ப்பும் உள்ளூர பயமும் அனேகரை வாட்டிக்கொண்டுதான் இருக்கிறது.
முக்கியமாக, நமக்கு எப்பொழுது சாவு வரும் என்றும் இந்த உலகத்தின் முடிவு எப்பொழுது வரும் என்றும் தெரிந்தால் அதற்கு ஏற்ப நாம் நம்முடைய வாழ்க்கையை திட்டமிடலாமே என்கிற எண்ணம்தான் நம்மை பகலும் இரவும் வாட்டி வதைக்கிறது.

சாவை தனிமனிதனாக வெல்லவும் உலக அழிவை கூட்டாக தகர்க்கவும் நாம் எடுக்காத முயற்சி இல்லை; கையாளாத யுக்தி இல்லை; பண்ணாத பரிகாரம் இல்லை; கும்பிடாத தெய்வம் இல்லை. போகாத கோயில் குளம் இல்லை; செய்யாத தருமம் இல்லை. இவ்வளவு செய்தும் தப்பித்துவிடுவோம் என்கிற நம்பிக்கை இன்னும் வந்தபாடில்லை. நாளுக்கு நாள் இன்னும் நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறதாகத்தான் தெரிகிறது.
எல்லாம் இறைவன் செயல்! மெய்யாலுமேயா?

சிருஷ்டிகராகிய கடவுள் ஒரு திட்டவட்டமான நோக்கமும், தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு செயல்திட்டமும் வைத்திருக்கிறார். இவைகளை பைபிள் என்னும் வேதாகமத்திலே பதிவு செய்து கொடுத்திருக்கிறார்; இதில்தான் தேவன் தன் படைப்புகளுக்காகவும், குறிப்பாக பூமிக்காகவும் அதிலுள்ள யாவற்றிற்காகவும் மக்களுக்காகவும் கொண்டுள்ள நித்திய நோக்கமும் அவர் அதை சாதிக்க வடித்துவைத்துள்ள விரிவான திட்டமும் விவரிக்கப்பட்டுள்ளன, இதில் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம். நம் அனைவருக்கும் இதில் பங்குண்டு – பலருக்கு அதிர்ஷ்டவசமாக ஆனால் மற்றவர்களுக்கு துரதிர்ஷ்டம்தான்.

கடவுளுடைய மகிமையான நித்தியத்தை அடைவதற்கு நாம் அவரோடு ஒத்துழைத்து செயல்படலாம் அல்லது முடிவில்லாத துன்பத்தை அடைவதற்கு அவருக்கு எதிராகக் கலகம் செய்து கொண்டிருக்கலாம். எப்படியும், இந்த திட்டத்தில் நாம் இருக்கிறோம். தேர்வு நம்முடையது, ஏனென்றால் தேவன் நம்மில் ஒவ்வொருவருக்கும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்குவதன் மூலம் மனிதவர்க்கத்தை கனப்படுத்தியுள்ளார்; நன்மையை தெரிந்தெடுத்தால் நிமிர்ந்து வாழ்வோம். தீமையை தெரிந்தெடுத்தால் வீழ்வோம், சாவோம். கடவுளுக்கு ஆரம்பமுதலே முடிவும் தெரியும் என்பதால், அவருடைய மேன்மையான நோக்கத்தை யார் ஏற்றுக்கொள்வார்கள், கீழ்ப்படிவார்கள் அல்லது அவருடைய இதுவரையும் இனியும் பிசகாத திட்டத்தை யார் நிராகரிப்பார்கள், எதிர்ப்பார்கள் என்பதையும் அவர் அறிவார்.

பேரின்பமிக்க எதிர்காலத்தை சொல்வதுமட்டுமல்லாது வரவிருக்கும் பேரழிவுகளைப் பற்றியும் பைபிள் எச்சரிக்கிறது, இவற்றில் பல ஏற்கனவே தொடங்கிவிட்டன,; விரைவில் இவை ஒரு உச்சக்கட்டத்தை அடையும் என்பதை நினைவில் கொள்க. (இது என் இரண்டாவது புத்தகமான "நிகழ்காலம் பதட்டமாயிருந்தாலும் எதிர்காலம் பரிபூரணம்" என்ற ஆங்கில நூலில் எழுதியுள்ளேன்). இந்த எச்சரிப்பு மணிகளுக்கு நாம் இதுவரை காதுகேளாதவர்கள் போல இருந்துவிட்டோம். இனியாவது விழித்து, கேட்டு உணர்வடைவோமா?

தேவ குமாரனாகிய இயேசு இப்பூமியில் வாழ்ந்த நாட்களிலேயே முன்னுரைத்ததுமல்லாமல் , பூர்வகாலங்களில் தானியேல் எசேக்கியேல் போன்ற தீர்க்கதரிசிகள் மூலமாகவும், கி பி முதலாம் நூற்றாண்டில் தம்முடைய சீஷர்களில் ஒருவரான யோவானுக்குத் தந்த தரிசனங்கள் மூலமாகவும் நடக்கப்போகும் இவை அனைத்தையும் காட்டியுள்ளார்.

இயேசு கிறிஸ்து மீண்டும் வருகிறார். இதுதான் இனிநடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளில் உச்சகட்டமாக சம்பவிக்கப் போகிறது. இவருடைய வருகையை மையமாகக் கொண்டுதான் மற்ற எல்லா நிகழ்வுகளும் சம்பவிக்கும். அவருடைய வருக்கைக்கு முன்னும் வருகையின்போதும் அவருடைய வருகைக்குப் பிறகும் நடக்கும் என்று அவர் உரைத்தவைகளையே நாம் இங்கே காணவுள்ளோம்.

அவர் வருகைக்கு முன்னே நடக்க வேண்டியவைகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம், அவர் முன்னுரைத்ததிலிருந்து இதுவரை நிறைவேறினவை ஒருபக்கமும், நாம் வாழும் இக்காலத்திலிருந்து அவர் வரும்வரை நிறைவேரவேண்டியவை அடுத்த பகுதியாகவும் பார்ப்போம்.

முதல் பகுதி, அவர் தீர்க்கதரிசனமாக உரைத்தவைகள் எவ்வளவு மெய்யானவைகள் என்று நமக்கு நிருபணமாக்கும், இதுமட்டுமல்லாது, அவருடைய வருகைக்கு முன்னரும், வருகையிலும், அதற்குப் பின்னரும் சம்பவிக்க வேண்டியவைகள் எவ்வளவு நம்பத்தகுந்தவை என்றும் நமக்கு உறுதிப்படுத்தி விடும். அதாவது, இப்புத்தகத்தை மட்டுமல்ல, வேதாகமத்தையே இதற்குமேல் படிக்கலாமா விட்டுவிடலாமா என்று நீங்கள் தீர்மானித்துவிடலாம்.

இரண்டாம் பகுதியில் இப்பொழுதிருந்து இனி நடக்கவேண்டியவைகளை பார்க்கப் போகிறோம். முதல் பகுதியில் அவர் சொன்னபடி யாவும் சம்பவித்துள்ளதால், இந்தப்பகுதி வாசிப்பவர்களுக்கு ஆவலைத் தூண்டுவது மாத்திரமல்ல, நம் வாழ்வை இனி எப்படி என்றென்றும் வாழும்படியாக அமைத்துக் கொள்ளலாம் என்கிற ஜாக்கிரதையையும் தந்துவிடும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மெய்க்கடவுளின் தற்சுரூபமாகையால் அவர் பொய்சொல்ல ஒரு சாதாரண மனிதன் அல்ல. காணக்கூடாத தேவனை நமக்குக் காண்பிக்க மனிதவர்க்கத்துக்குள் மனுஷனாக கடந்துவந்த தேவ குமாரனாகிய இந்த இயேசுதான் நமக்கு கண்கண்ட தெய்வம். நமக்குள்ளே வாசம்பண்ணும்படியாக உள்ளத்தில் கடந்துவந்த கடவுளின் ஆவியானவர், நமக்கு இந்த கடவுளின் வார்த்தைகளை தொடர்ந்து போதிக்கிறவர், அவைகளில் வழிநடத்துகிறவர், தைரியமும் நடக்கும்படி பெலனும் அருளுகிறவர். இவருடைய உதவியோடுதான் நாம் வேதாகமத்திலுள்ள சத்தியங்களை புரிந்துகொள்ள முடியும்.

இந்த தேவ ஆவியானவருடைய உதவியோடு முன் செல்வோமா?

இயேசுவின் வருகைக்கு முன்னே – இதுவரை

எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். எருசலேம் தேவாலயத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும். கி பி 70ல் இது நடந்தது.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; தீத்து இராயன் காலத்தில் இது நடந்தது.
அநேகர் வந்து, இயேசுவின் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, காலம் சமீபித்தது என்றும் சொல்லி அநேகரை வஞ்சிப்பார்கள். அது இப்போழுதும் நடக்கிறது. ஈஷா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், யாகவா முனிவர் போன்ற மற்ற மதத்தினர் மட்டுமல்லாது போலி கிறிஸ்தவ ஊழியர்களே இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; தேசங்களுக்கு இடையில் அரசியல் ரீதியான உலக மகா யுத்தங்களும் மதங்களுக்கு இடையிலும் மத உட்பிரிவுகளுக்கு இடையிலும், ஜாதிகளுக்கு இடையிலும் போர்களும் சண்டைகளும் அனுதினமும் நிகழ்கிறதை நாம் பார்துக்கொண்டுதான் இருக்கிறோம். பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானம் பூமியிலிருந்தெடுத்துப் போடப்படும்.

பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், மகாபூமியதிர்ச்சிகளும் கலகங்களும் பல இடங்களில் உண்டாகும். ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும் மற்ற பல தேசங்களிலும் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் மரிப்போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதை நாம் அறிவோம். அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை ஏறிப்போய் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் வந்துவிடும். எண்ணெய்யும் மருந்தும் மதுவும் கிடைத்துக்கொண்டே இருக்கும். கோவிட்19 மட்டுமல்லாது இன்னும் பல கொள்ளை நோய்கள் வந்து போயிருக்கின்றன; இன்னும் இருக்கிறது. கடந்த நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டிலும் ஏற்பட்ட பூகம்பங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமே என்று ஒரு கணக்கீடு சொல்கிறது. தீவிரவாதங்களும் மதக்கலவரங்களும் அதின்நிமித்தம் ஏற்படும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதை யாரும் மறுக்க முடியாது.

தொழில்நுற்பம் வேகமாக வளர்ச்சி பெற்று ஆக்கத்தைவிட அழிவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும். மருத்துவம், இராணுவம், வணிகம், வியாபாரம், தொழில், பொருளாதாரம் மற்றும் இன்னபிற துறைகளில் இது மிகுந்த எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.
இயேசுவின் சீஷர்களை உபத்திரவங்களுக்கும் ஆலோசனைச் சங்கங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, அவர்களை ஜெபஆலயங்களில் அடிப்பிப்பார்கள்; கொலைசெய்வார்கள்; அவர் நாமத்தினிமித்தம் அவர்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவார்கள். ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் அவர்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள். தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவார்கள்; அப்பொழுது, சகோதரன் சகோதரனையும்,
தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவார்கள்; அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள்;
அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். ஜோதிடர்களும் இராசிபலன் சொல்லுகிறவர்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவ ஊழியர்களும் பொய் சொல்லி மக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சி எங்கும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.
அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். மெய் அன்பு என்பதிற்கு பதிலாக, மாயுமால அன்பும் காமமும்தான் எங்கும் பரவிக் கிடக்கிறது. தம்பதிகளுக்கு இடையிலும், பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலும் தன்னலமிக்க அன்புமட்டுமே மேலோங்குகிறது.

பரலோக ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். ஊடகங்கள் மூலமாகவும், பெருங்கூட்டங்கள் மூலமாகவும், தனிநபர் உரையாடல்கள் மூலமாகவும் இயேசுவின் நற்செய்தி உலகெங்கும் பரவியுள்ளது. சமாதானத்தை அறிவிக்கும் நற்செய்தியாளர்கள் சாத்தானின் சேனைகளை ஜெயிக்கிறவர்களாகவும் ஜெயிப்பவர்களாகவும் உலகெங்கும் சுற்றிவருவார்கள்.

பாழாக்குகிற அருவருப்பு அது நிற்கத்தகாத இடத்திலே, பரிசுத்த ஸ்தலத்திலே, நிற்கும். இதைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறான். வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். எருசலேமிலுள்ள அல் அக்ஸா மசூதி கி பி 686-688ல் நிறுவப்படபொழுது இது நிறைவேறினது. உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.. இன்றுவரை இது இன்னும் முடியவில்லை.

புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். கி பி 1948 வரை யூதர்களுக்கு புறஜாதியாரின் காலம். அதுவரை இசுலாமியர்தான் பாலஸ்தீனத்தை ஆண்டுகொண்டிருந்தார்கள். கி பி 1967 வரை எருசலேம் அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இன்னொருபுறம், இந்த கி பி 1967 வரை இஸ்ரவேலர்கள் என்று ஞானார்த்தமாய் சொல்லப்படும் கிறிஸ்துவின் விசுவாசிகளும் புதியஎருசலேம் என்னும் சபைக்குள்ளாக கூட்டம் கூட்டமாக சேர்த்துக் கொள்ளப்பட்டுக்கொண்டேதான் இருந்தார்கள்.
இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் வனாந்தரத்தில் இருக்கிறார்; அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்லுவார்கள். இந்த ஏமாற்றுவேலை பிரசங்க மேடைகள் துவங்கி, ஆலயக் கட்டிடங்கள் மற்றும் நீச்சல் குளம் வரைக்கும் போயிருக்கிறது. கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்பதுதான் வேதம் சொல்லும் உபதேசம்.

கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். தொலைகாட்சி மற்றும் யூடியூப் சேனல்களிலும் வலைதளங்களிலும் இன்று இதுதான் பிரபலமாக நடக்கிறது.

ஆதிமனிதன் பாவம் செய்த நாளிலிருந்து கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்த யாவரும் மரித்தவுடன் பாதாளதிற்கு சென்றார்கள். அவர்களுடைய ஆத்துமாக்களை சாத்தான் உரிமைகொண்டாடினான். சாத்தானோடு விழுந்த அபத்தோன் என்னும் பேர்கொண்ட ஒரு தூதன்தான் அந்த இடத்திற்கு அரசன். பாதாளத்திலிருந்து பலவிதமான வஞ்சனை நிறைந்த கொள்கைகளையும் போதனைகளையும் மதங்களாகவும் மனிதனை சோரம்போக்கும் மற்ற துன்மார்க்கமான யுக்திகளாகவும் சாத்தான் அவிழ்த்துவிட்டான். மக்கள் இவைகளை நம்பினதால் மெய்தேவனையும் பரலோகத்தையும் காணக்கூடாதபடிக்கு மனக்கண்கள் குருடாகிப்போனது. கடவுளின் ஆவியைப்பெற்றவர்களோ இவைகளால் பாதிக்கப்படவில்லை. வேகம், ஆளுகை, (போலியான) மனிதம், புகழ், ஆக்ரோஷம், வலிமை, அமர்க்களம் போன்ற தன்மைகளை உடைய மனுஷர்மூலமாக அதிகாரமிக்கவர்கள் பொதுமக்களை மறைமுகமாக தீண்டி வேதனை உண்டாக்குவார்கள்.

நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். பெருந்தீனி, குடி, வெறி, பாலியல் உறவு இவைதான் இன்று சமுதாயத்தில் மக்களை மற்ற முக்கிய காரியங்களுக்கு உணர்வற்றவர்களாக ஆக்கிவிட்டிருக்கிறது.

லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். கன்சியூமெரிசம் என்கிற நுகர்வோர் / வாடிக்கையாளர் நிர்ணயிக்கும், செல்வத்தை மைய்யமாகக் கொண்ட பொருளாதார சமுதாயம் தான் இன்று எங்கும் பார்க்கிறோம்.
கிறிஸ்து இயேசுவினுடைய வருகைக்கு சற்றுமுன் இருக்கும் அவருடைய சபையானவர்கள் உலகத்தின் இச்சைகளில் உழன்றுபோய் வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழாமல் நிர்ப்பாக்கியமுள்ளவர்களும், பரிதபிக்கப்படத்தக்கவர்களும், தரித்திரரும், குருடரும், நிர்வாணிகளுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுவார்கள்.
ஒவ்வொரு தனிமனுஷனும் தானே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் உரிமை கொண்ட நபராக, எனக்கு நானே கடவுள், நான் ஒருவருக்கும் அடிபணிய மாட்டேன் என்கிற மனப்பான்மை உடையவர்களாகி விடுவார்கள்.

1967 வரை இல்லாத அளவு இந்த ‘நானே கடவுள்’ என்கிற எண்ணம் எல்லா மனிதருக்குள்ளும் குழந்தைகளுக்குள்ளும் இப்பொழுது குடிகொண்டிருக்கிறது.

விசுவாச துரோகம் முந்தி நேரிடும். ஒருகாலத்தில் தீவிர விசுவாசிகளும் கடவுளின் பணியாளர்களாக இருந்தவர்களும் மெய்தேவனை விட்டுவிட்டு பொருள், பணம், செல்வம், வசதி இவைகளை பின்பற்றுகிறவர்களாவார்கள்.

சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். இயேசுவின் ஜீவனைப் பெற்றவர்கள், அதை இழந்துபோய் மரித்தவர்களும், மரிக்கிறவர்களும் ஆவார்கள். அதனால், வஞ்சனையாய் பேசி கவர்ந்திழுக்கிற பிரசங்கிகள் சொல்லும் வார்த்தைகளை நம்பி மோசம்போவார்கள்.

கிறிஸ்துவின் சபையார் அவர்மீது கொண்டிருந்த ஆதி அன்பை விட்டுவிடுவார்கள். அவர் கொடுத்த ஆவிக்குரிய ஐஸ்வரியங்களை அனுபவியாமல் தரித்திரர் ஆவார்கள். பெயரளவில் யூதரானவர்கள் சாத்தானுடைய கூட்டமாகி தேவனை தூஷிப்பார்கள். பொருளாசை உடையவர்களாய் பணத்தை கடவுளாக செவிக்கும்படி போதிக்கப்படுவார்கள். தேவனுக்கு பதிலாக தேவனுடைய ஊழியர்கள் சேவிக்கப்படுவார்கள். இவைகளுக்கும் தப்பினவர்கள் சிலர் நீதியின் கிரியைகளை செய்கிறவர்களாக சபையில் இருக்கத்தான் செய்வார்கள்.
சிலர் ஆவியில் மரித்தும் கிறிஸ்துவின் ஜீவன் உள்ளவர்கள் போல நடிப்பார்கள்; இதிலும் விதிவிலக்காக பரிசுத்தமும் ஜீவனுமுள்ளவர்கள் சிலர் சபையில் இருப்பார்கள். சோதனைக்காலத்துக்கு சற்று முன்பும் முடிவுகாலம் ஆரம்பிக்கும் முன்பும் (1948) ஒரு பெரிய எழுப்புதல் சபையில் உண்டாகி, பெருந்திரள்கூடம் இரட்சிக்கப்படுவார்கள். சாத்தனுடைய கூட்டத்தாராகிய சில யூதர்களும் இரட்சிக்கப்படுவார்கள்.

கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வரும். மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தை உள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தம் இல்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்காம் இல்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்;
அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள் அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காண்பீர்கள். இரண்டாம் உலகப் போருக்குப்பின் கி பி 942க்குப் பிறகுதான் ஒருகாலத்தில் ஓங்கி செழித்த அநேகம் நாடுகள் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு சுயாதீனம் அடைந்தன.
அத்திமரத்திலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். கி பி 1948ல் இஸ்ரவேல் என்னும் அத்திமரம் யூதர்களுக்கான ஒரு நாடாக உருவானது. கி பி 1967ல் எருசலேம் இஸ்ரவேலால் கைப்பற்றப்பட்டு, அதற்கு தலைநகராக அறிவிக்கப்பட்டது.

இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது. மேற்சொன்ன இந்த சம்பவம் நிகழ்ந்ததை கண்ட சந்ததி (கி பி 1967க்குப் பின் பிறந்தவர்கள்) உலகத்தின் முடிவை காண்பார்கள்.

முதலாம் நூற்றாண்டிலேயே யூதார்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தவர்களுக்கு மிகவும் உபத்திரவம் கொடுத்து, மற்ற மதத்தினரை தூண்டிவிட்டு யூதரும் புறஜாதியினருமான அவருடைய சாட்சிகள் பலரை கொலைசெய்தார்கள். யாக்கோபு, பேதுரு, பவுல், தீமோத்தேயு போன்றோர் இப்படி இயேசுவுக்கு இரத்தசாட்சியாய் மரித்தவர்களே. இயேசுவினுடைய தெய்வீகத்தை அந்த யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தேவகுமாரன் என்பதை அங்கீகரித்து அறிக்கை செய்யவில்லை. இயேசுவினுடைய சீஷரில் ஒருவனான யோவான் இவர்கள் அநேகர் தன்காலத்தில் வாழ்ந்ததாக தன்னுடைய இரண்டு நிருபங்களில் எழுதினான். இவர்களை அவன் அந்திகிறிஸ்துக்கள் என்று அடையாளம் காட்டுகிறான். இப்படி ஒருவன் வரமாட்டான், பலர் இப்பொழுதே இருக்கிறார்கள் என்றான்.
இயேசுவை கடவுள் என்று விசுவாசியாத இந்த யூதரகளில் ஒரு பெருங்கூட்டமும் பெடுவின் என்கிற இஸ்மவேலரும் கி பி 7ஆம் நூற்றாண்டில் இசுலாமியரானார்கள். அநேகம் புறஜாதியினரை பட்டயம் / வாள் முனையில் கட்டாயப்படுத்தி தாங்கள் இன்றும் சொல்லும் தங்கள் விசுவாச அறிக்கையை சொல்லவைத்து, தங்கள் மதத்தில் சேர்த்தார்கள். இவர்கள் யாவரும் இயேசு தேவகுமாரனாக இருக்க முடியாது (கடவுளுக்கு மகன் இருக்க முடியாது) என்றும் மனித வடிவில் வந்த இந்த இயேசு கடவுளல்ல என்றும் அறிவித்தார்கள். இவர்களையும் அந்திகிறிஸ்துக்கள் என்று யோவான் அன்றே சுட்டிக்காட்டினான்.

அந்திகிறிஸ்துக்கள் என்றால் அந்தியில் அல்லது இறுதியில் வருகிறவர்கள் அல்லர். ஆன்டிகிரைஸ்ட் என்னும் வார்த்தையின் தமிழ் வழக்கம்தான் இது. அதாவது, கிறிஸ்துவுக்கு விரோதமாக அல்லது கிறிஸ்துவை எதிர்ப்பவர்கள் என்று பொருள்படும் சொல்லே அந்திகிறிஸ்து. கிறிஸ்தவர்களையும் தான்!

இதில் முதலில் குறிப்பிடப்பட கூட்டத்தினர்தான் இன்றைக்கு உலகெங்கும் பல பெயர்களில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். உலகின் மற்ற பலநாடுகளிலும் முக்கியமாக அமெரிக்காவிலும் யூதர்கள் என்கிற பெயரில் வாழ்கிற இவர்கள், வெள்ளையர்களாகிய ஐரோப்பியர்களாகவும், இந்து நதியை கடந்து வந்து பாரத துணைக்கண்டத்தில் குடிபுகுந்த இந்து ஆரியர்களாகவும் இன்று நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் (USA) பேருதவியோடு 1948ல் இஸ்ரவேல் என்னும் ஒரு தனி நாடாகவே அங்கீகரிக்கப்பட்டார்கள். இன்று யூதர்களில் 41% இந்த இஸ்ரவேல் நாட்டிலும், 41% அமெரிக்காவிலும், மீதி 18% மற்ற நாடுகளில் சிதறியுள்ளவர்களாகவும் வாழ்கிறார்கள்.
அந்திகிறிஸ்துக்கள் தேவனை தூஷிக்கிறவர்களாக உலகெங்குமிருக்கிற ஜனங்கள் மத்தியிலிருந்து எழும்புவார்கள். ஏழுதலைகளையும் பத்து கொம்புகளும் உடையவர்கள் இந்த ஜனங்கள். இவைகளில் ஒரு தலை சாவுக்கேதுவாக காயப்பட்டு, பின்பு திரும்ப அந்த காயம் சொஸ்தமாக்கப்படும். (இது மறுபடியும் உருவான இஸ்ரவேல் நாடாகவோ அல்லது உலக மக்கள்மீது இசுலாமியார் திரும்ப ஆதிக்கம் செலுத்தும் செயலாகவோ இருக்கலாம்). உலக மக்கள் யாவரும் இதைக் கண்டு வியந்து, பின்பற்றுவார்கள்; அதற்கு அதிகாரம் வழங்கிய சாத்தானை வணங்குவார்கள்; இந்த அந்திகிறிஸ்துவுக்கு ஒப்பில்லை என்று அறிக்கையிட்டு எதிர்த்துக்கொள்ள இயலாதவர்களாக அதையும் வணங்குவார்கள்.

பெருமையானவைகளையும் தூஷணங்களையும் இந்த அந்திகிறிஸ்துக்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். பிரித்தாளும் யுக்தி உடைய இவர்கள் ஜனத்தின் மத்தியில் யுத்தம் பண்ணிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் இயேசுவையும், அவருடைய மக்களையும், அவருக்குள் மரித்த அவருடைய சீஷர்களையும் தூஷித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களோடே இந்த அந்திகிறிஸ்துக்கள் யுத்தம்பண்ணி எல்லா கோத்திரத்தாரிலும் பாஷைக்காரரிலும் ஜாதிகளிலும் உள்ளவர்களை கொன்றுபோடுவார்கள்.
பிரித்தானிய தேசம் உலகமனைத்தையும் அடிமைப்படுத்தி ஆட்சிசெய்தது ஒரு காலம். இவர்களே அடிமையாகிப்போவார்கள். (இசுலாமியருடைய ஆதிக்கம் இன்று இங்கிலாந்தில் அதிகரித்துக்கொண்டே போவதை யாரும் மறுக்க முடியாது. லண்டனின் மேயர் ஒரு இசுலாமியரே. பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட இந்து ஒருவர் நவம்பர் 2022ல் இதன் பிரதம மந்திரி ஆகியிருக்கிறார்.

தீவிரவாதத்தினால் தங்கள் அதிகாரத்தை பெருக்கிக் கொண்ட ஜனம் இன்று தீவிரவாதத்தால் அழிந்துகொண்டிருக்கிறதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஈரான் ஈராக் குவைத் ஏமென் போன்றவையும் இதில் அடங்கும்.

இந்த யூதர்கள்தான் உலக மக்களே வியக்கத்தக்க அற்புதங்களை கண்முன் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நோபல் பரிசு வென்றவர்களில் இந்த யூதர்களே 40%க்கும் மேலானவர்கள். தகவல் தொழில்நுட்பமும் ராணுவ தளவாடங்களும் அணு ஆயுதங்களும் இவர்கள் கண்டுபிடிப்புகளே. இவைகளை உலகெங்கும் விற்பனை செய்கிறவர்களும் இவர்களே. உலக நாடுகளின் பணம் அனைத்தும் இவர்கள் கைகளில்தான் இருக்கிறது. அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி முதல் பல நாடுகளுக்கு கடன் வழங்கும் உலக வங்கிகள் இவர்களுடையதே. அமெரிக்க உள்பட பல உலக நாடுகள் இவர்களுடைய இராணுவ தளவாடங்களையும் ஆயுதங்களையும் கடன் வாங்கி இறக்குமதி செய்கின்றன.

இந்த அந்திகிறிஸ்துக்கள்தான் தங்களுடைய பணபலத்தாலும், இராணுவத் தொழில்நுற்பத்தாலும், மருத்துவ மற்றும் அறிவியல் திறமையாலும், தங்களுக்குக் கைப்பாவையான பெரும்பாலான ஊடகங்களாலும், தாங்கள் தலைமைதாங்கும் உலகின் எல்லா முதன்மை தொழில் நிறுவனங்களாலும், பொய்மதங்களாலும், தங்கள் கொள்கைகளை பரப்பும் கல்வி நிறுவனங்களாலும் உலகத்தையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய அமேஜான் மெட்டா (ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம்), மைக்ரோசாஃப்ட், கூகிள் (Go ogle என்றால் திருட்டுத்தனமாக போய் பார்த்துக்கொள் என்று பொருள்படும்) எல்லாமே மக்களை அடிமையாக்கும் நோக்கத்தோடுதான் உருவாக்கப்பட்டன. ஸ்டார் தொலைக்காட்சி போன்றவையாவும் இவர்களுடையதே. சிறியது முதல் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களுடைய தரவுகளை (data) தங்களுடைய கிலௌட் (cloud) தொழில்நுட்பத்தின் மூலம் தங்களுடைய பிடியில் வைத்திருப்பவர்களும் இவர்களே.
இந்தியாவில் 90% க்கும் மேல் நீதித்துறையிலும் அரசுப்பணியிலும் (ஐ‌ஏ‌எஸ், ஐ‌பி‌எஸ், ஐ‌எஃப்‌எஸ்) மற்றும் ஊடகங்களிலும் தலைமைதாங்குகிறவர்கள் இவர்கள்தான்.
இந்த ஆரியர் தங்களுடைய சனாதனத்தை (இது தருமமே அல்ல!) இங்கு புகுத்தி ஆதிமுதல் இங்கு குடியிருந்த வாசிகளை / குடிமக்களை தங்களுக்கு அடிபணிய வைத்தார்கள். தங்களுடைய வருணாசிரம தருமத்தின்படி இந்த நாட்டினரை கீழ்சாதியினரகவும் (சத்திரியர்கள், வணிகர்கள், SC, ST, BC, MBC, OBC, போன்ற தலித்துகள் மற்றும் பஞ்சமார்) இந்துக்களாகவும் ஆக்கிவிட்டார்கள்.

இந்த அந்திகிறிஸ்துக்கள் ஆளுகை செய்ய சாத்தான் தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் இந்த அந்திகிறிதுக்களுக்கு கொடுத்திருக்கிறான்.

USA என்கிற அமெரிக்க ஐக்கிய நாடுகள் நானூறு வருடங்களுக்கு முன் இல்லவே இல்லை. ஆனால், வெகு சீக்கிரமாகவே இது வந்தேறிகளால் வளர்ந்து இன்று உலகின் மிகப்பெரிய பொருளாதாரமிக்க நாடாக அறியப்படுகிறது. ஆனால் இதன் வளர்ச்சிக்குப் பின்னால் யூதர்கள் இருக்கிறார்கள் என்றால் இது மிகை அல்ல. உலகில் 41% யூதர்கள் இங்குதான் உள்ளனர். இவர்கள்தான் பின்னணியிலிருந்து அமெரிக்காவை ஆட்டிப் படைக்கிறார்கள். இந்த USA தான் அந்திக்கிறிஸ்துக்களின் வாயாக செயல்படுகிறவர்கள். அரசியலில் தங்களுக்கு சாதகமான ஒருவரை முன்னிறுத்தி அவர் மூலமாக தங்கள் காரியத்தை சாதிக்கிறவர்கள். (இந்தியாவிலும் இப்படித்தான்!). ஆளுகிறவர்கள் மக்களை இவர்கள் பாதங்களில் அடிபணிய வைப்பார்கள். கள்ளத் தீர்க்கதரிசி என்று வேதம் இவர்களைக் குறித்துதான் சொல்கிறது. இவர்கள் இஸ்ரவேல் என்னும் சொரூபத்தை 1948ல் உருவாக்கி, உலகம் முழுவதையும் இவர்களை தொழுத்துக்கொள்ளச் செய்தார்கள்.

இயேசுவின் வருகைக்கு முன்னே – இனிமேல்

மத்திய கிழக்கு நாடுகள் கடைசி நாட்களில் அதிமுக்கியத்துவம் பெறுபவையாக இருக்கும். இஸ்ரவேலும் சிரியா, ஜோர்டன், ஈரான், ஈராக், லெபனோன் போன்ற யூப்ரட்டீஸ் (புரட்டிப் போடும் வலிமை) நதியை சுற்றியுள்ள நாடுகளும் உலகத்தின் முடிவுக்கு நேரடி காரணமாக இருக்கும். மனுஷரில் மூன்றில் ஒரு பங்கை இந்த நாட்டினர் சடுதியாகவோ மெதுவாகவோ கொல்ல வலிமை பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களோடு கிழக்கிலிருந்து சில நாடுகள் சேர்ந்துகொண்டு உலக அழிவுக்கு காரணமாக இருப்பார்கள். இந்தியாவும் சீனாவும் இவைகளில் இருக்கலாம். (இவர்கள் இராணுவம் அக்கினி (சிவப்பு), நீலம், கந்தக (மஞ்சள்) நிறமுடைய சீருடையுடையது). ஏவுகணைகளின் வல்லமை அக்கினியைக் கக்கும் அவைகளின் தலைகளிலும் வால்களிலும் இருக்கும். இவைகளனைத்தின் மத்தியிலும் மக்கள் தங்கள் விக்கிரகஆராதனையையும் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனம்திரும்ப மாட்டார்கள்.
இயேசுவின் சாட்சிகளாக பூமியிலுள்ள அவருடைய சபை அவரை விசுவாசித்து, பாவ மன்னிப்பு பெற்று, இரசிக்கப்பட்ட புறஜாதிகளாலும் யூதர்களாலும் ஆனதே. அவர்கள் எளிய வாழ்க்கைமுறையை பின்பற்றினவர்களாக உலகெங்கும் ஒலிவமரங்கள் போன்றும் விளக்குத் தண்டுகள் போன்றும் அவருக்கு சாட்சிகளாக சுவிசேஷம் அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். கி.பி1948/67க்குப் பிறகு இவர்கள் சாத்தானால் கொல்லப்படுவார்கள். இவர்களுடைய சவங்களை உலகமே வேடிக்கை பார்த்து, சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொள்வார்கள்.

(1) கடைசிகால மிருகமும் (காலா, பீஸ்ட்?) அந்திகிறிஸ்துக்களின் இராஜ்ஜியமுமாகிய யூதர்கள் (வெள்ளையர்களான ஐரோப்பியர்களும் யூத பிராமணர்களாகிய ஆரியர்களும் இதில் உண்டு) மற்றும் இசுலாமிய ஜனம், (2) அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகள் (யு எஸ் ஏ USA) என்னும் கள்ளத்தீர்க்கதரிசியின் இராஜ்ஜியம், (3) இவர்களிருவரையும் ஆட்டிப் படைக்கும் சாத்தான், (4) சாத்தானைச் சேர்ந்த அவனோடு விழுந்துபோன தூதர்கூட்டம் (5) கடவுளுடைய ஆளுகைக்குப் பணியாத மனிதவர்க்கம், (6) பாதாளம் (grave) / கல்லறை – இவர்கள் யாவரையும் தேவ குமாரனாகிய இயேசுவும் அவருடைய ஆளுகையை பூமியிலே அமலாக்கும் அவருடைய விசுவாசிகளும் ஜெயித்து அதளபாதாளத்தில் (bottomless pit) தள்ளி, (7) கடைசி சத்துருவாகிய மரணத்தையும் தங்கள் காலின்கீழ் நசுக்கிப் போடும் வரை இயேசு பரலோகத்திலிருந்து பூமியிலே ஆளுகை. செய்துகொண்டிருக்கிறார். அவர் அறியாமல் ஒன்றும் நடப்பதில்லை. அவர் அனுமதிக்காமல் எதுவும் நிகழ்வதில்லை

இயேசுவின் வருகையின்போது – இனிமேல்

சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும். சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்; வானத்தின் நட்சத்திரங்கள் விழும், அத்திமரமாக விவரிக்கப்படுகிற இஸ்ரவேல் மற்ற நாடுகளால் தீவிரமாக அசைக்கப்படுவதினால் தன்னுடைய ஏவுகணைகளை வானத்திலிருந்து காய்கள் உதிர்வதுபோல விழப்பண்ணும்.

பூமி மிகவும் அதிரும்; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுக்கும்; சந்திரன் இரத்தம் போலாகும். வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போகும்; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோகும். சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாகும். பூமியில் 10% பூமியதிர்ச்சியினால் அழிந்து போகும். ஒரு பெரும் ஜனத்தொகை அழிந்துபோவார்கள். (ஏழு நிறைவையும் ஆயிரம் ஒரு பெரிய எண்ணாகவும் எடுத்துக்கொண்டால், ஏழாயிரம் பேர் சாவார்கள்).
வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும். ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம். பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, கடவுளுடைய முகத்திற்கும் கோபத்திற்கு எங்களை மறைத்துக்கொள்ளுங்கள் என்பார்கள். சாவைத்தேடினாலும் (தற்கொலைக்கு முயன்றாலும்) சாவு வராது.

சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.

அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்படும். (பெரிய அணு உலை?) அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு தீவிர மாசுபடும். சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போகும்; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாகும்.

ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழும்; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழும். அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாகும்; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் சாவார்கள்.

சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்படும், அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடையும்; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போகும், இரவிலும் அப்படியேஆகும்.
இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, அவருடைய சீஷர்களின் மீட்பு சமீபமாயிருப்பதால், அவர்கள் நிமிர்ந்து பார்த்து, அவர்கள் தலைகளை உயர்த்தவேண்டும்.

(அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்;. ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்). இயேசு வரும்போது பூமியில் ஒருபக்கம் பகல் இன்னொரு பக்கம் இரவு மறுபக்கம் காலை அல்லது மாலை நேரமாக இருக்கும். எப்படியும், அவரை விசுவாசித்தவர்கள் அவராலே எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.

அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார். இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் அவர்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்பார்கள்.

இயேசு கிறிஸ்து மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் அவருக்குள் நித்திரையடைந்தவர்களோடும் தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள். கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; எக்காளம் தொனிக்கும்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். (அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்);

பின்பு உயிரோடிருக்கும் அவருடைய சபையாகிய விசுவாசிகளும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்பார்கள். ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, இவர்களெல்லாரும் மறுரூபமாக்கப்படுவார்கள். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? என்கிற வெற்றி முழக்கம் கேட்கும். பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம். (இது கடைசி எக்காளமாகிய ஏழாம் எக்காளமும் என்று எழுதியிருக்கிறது)

மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.

சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்த; ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய பரிசுத்தவான்களாகிய ஜனங்கள், வெற்றி பெற்றவர்களாக கடவுளுக்கு முன்பாக நின்று ஆர்ப்பரிப்பார்கள்.

கடைசியான மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாகும்.

அதன்பின்பு முடிவு உண்டாகும்

அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.

நல்ல காலம் பொறக்குதா?
Topic
Prophecy
Category
Prophecy
bottom of page